ஏ.இக்பால். கொழும்பு 12: ஸபீனா பதிப்பகம், 20, பிரைஸ் பிளேஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1969. (கொழும்பு 12: ஸபீனா அச்சகம்).
60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ.
புகழ்பெற்ற பாரசீக சூபிக் கவிஞர் மௌலானா றூமியின் கிதாபுல் மஸ்னவியில் உள்ள கவிதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பு இதுவாகும். கவிஞர் இக்பால் 1956இலிருந்து கவிதை, சிறுகதை, விமர்சனக்கட்டுரை , இஸ்லாமியக் கட்டுரை ஆகியவற்றை இலங்கையிலும், தமிழகத்திலும் வெளிவரும் ஊடகங்களில் எழுதி வருபவர். முஸ்லிம் கலைச்சுடர் மணிகள் என்ற நூலுக்குப் பின்னர் வெளிவரும் இவரது இரண்டாவது நூல் இது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87293).