9252 இந்துப் பண்பாடு: அன்றும் இன்றும்.

வி.சிவசாமி (மூலஆசிரியர்), ப.கணேசலிங்கம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயர் அறுபதாம் அகவை நிறைவு நினைவு வெளியீடு, இந்து நாகரிகத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2005. (தமிழ்நாடு: மீரா பைன் ஆர்ட்ஸ், சிவகாசி).

xxi, 213 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 350., அளவு: 22×14 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சம்ஸ்கிருதத்துறைத் தலைவரான பேராசிரியர் விநாயகமூர்த்தி சிவசாமியின் கட்டுரைகளின் தொகுப்பு. யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும், இந்து நாகரிகப் பேராசிரியரும், சம்ஸ்கிருத அறிஞருமான கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயரின் அறுபதாம் அகவை நிறைவினைப் பாராட்டுமுகமாக இந்நூல் யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ப.கணேசலிங்கம் அவர்களால் தொகுத்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூலில், இந்து சமயம்: சில பொதுக் கருத்துக்கள், எல்லோரும் இன்புற்றிருக்கவே, ஹரப்பா பண்பாட்டில் இந்து சமயம், வேதங்கள் கூறும் சமய, வாழ்வியல் கருத்துக்கள், வட மொழிச் சைவசித்தாந்த மரபும், உமாபதிசிவாச்சாரியாரின் சதரத்ன சங்கிரகமும், சைவசமய மரபும் சிவாச்சாரியாரும், விநாயகர் தத்துவம், முருக வழிபாடும் தத்துவமும், அம்பிகையின் மகத்துவம் கூறும் நூல், பக்தி-சில குறிப்புகள், சிவதோத்திரங்கள்-ஒரு குறிப்புரை, இந்து சமய வழிபாட்டில் இயற்கை, மணிவாசக நெறி, வர்ணாச்சிரம தர்மம், கௌடில்யர் கூறும் அரசும் சமூகநல சேவையும்,  பரத நாட்டியம்-ஒரு பொது நோக்கு, இலங்கையிலே பண்ணும் பரதமும்-சில குறிப்புகள், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கண்ட இராமபிரான், தேர் பற்றிய சில கருத்துக்கள், காலத்தால் முந்திய நல்லூர்ச் சிலைகள், இலங்கைச் சிற்பங்கள், யாழ்ப்பாணக் குடாநாட்டில் இந்து சமயம்- சில வரலாற்றுக் குறிப்புகள் (கி.பி.1800 வரை), நவீன இந்துமதச் சிந்தனையாளர் வரிசையில் ஆறுமுக நாவலர், இலங்கையின் இந்துப் பண்பாட்டு மரபும் சேர் பொன்னம்பலம் இராமநாதனும், இன்றைய உலகில் சைவம் ஆகிய 25 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 165492).

ஏனைய பதிவுகள்