இ.இராஜேஸ்கண்ணன். யாழ்ப்பாணம்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
xii, 107 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-14-5.
கலையின் சமூகவியல்-சில சிந்தனா கூடங்களின் வழியான தேடல், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் ‘காதலியாற்றுப்படை’-ஒரு பண்பாட்டுக் கோலப் பதிவு, திருக்குறள் புலப்படுத்தும் மக்கள் பங்கேற்றலின் கூறுகள்: ஒரு சமூகவியல் நோக்கு, யாழ்ப்பாணத்துச் சமூக பண்பாட்டு அசைவியக்கத்தில் பண்பாட்டு ஆளுமைகளின் வகிபாகம்: பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை குறித்த ஒரு சமூக மானுடவியல் நோக்கு, ஒளவையை மறுதலிக்கும் அவ்வைகள்-பெண் கவிஞர் தொடர்பான இருதுருவ நோக்கு, ஈழத்துக் கவிதைத் தடத்தில் ஹைக்கூ கவிதைகள், கவிதை மொழி உணர்வுத்தளமும் கருத்தியல் தளமும், யுகசந்தி- ஒரு சமூக வரலாற்றுப் பதிவின் புனைவாக, புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் குறித்த ஒரு உசாவல், ஆத்திசூடி: ஒளவையார்-பாரதி-முருகையன் ஒரு கருத்துநிலை ரீதியான ஒப்பாய்வு ஆகிய பத்து கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சு 24.10.2015இல் கிளிநொச்சியில் நடாத்திய வடக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் 2014இல் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த திறனாய்வு நூலுக்கான பரிசை வென்ற நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 236660).