திலகா விவேகானந்தன். கொழும்பு 5: பெண்கள் ஆராய்ச்சி நிலையம் (சென்வோர்), 12-1/1 அஸ்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 10: யூனிவோக்கர் பக்கேஜிங் லிமிட்டெட், 114 நொரிஸ் கனால் வீதி).
14 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 955-9052-35-7.
ஓவியர் ரஜினி கணேசரட்ணத்தின் விளக்க ஓவியங்களுடன் வெளிவந்திருக்கும் இந்நூல், பெண்களின் எழுத்தறிவினை விருத்திசெய்வதனை நோக்காகக் கொண்டு சென்வோர் செயற்பாட்டு எழுத்தறிவிற்கான கைநூல் தொடரில் மூன்றாவதாக வெளியிடப்பட்டதாகும். ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எமது சமூகங்களில் பாரம்பரியமாக உள்ள நம்பிக்கைகள், நடைமுறையிலுள்ள பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஒரு நவீன அணுகுமுறையில் நோக்கும் எண்ணத்துடன் தலையங்கங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இக்கதை வீட்டில் பெண்கள் கணவன்மாரால் கொடுமைப்படுத்தப்படுவதையும் அதனால் குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்களையும் விளக்குகின்றது.