புதிய பூமி. கொழும்பு 11: புதியபூமி வெளியீட்டகம், சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் பிரைவேற் லிமிட்டெட், 47, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (கொழும்பு 13: கௌரி அச்சகம், இல. 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
vi, 91 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 21.5×14 சமீ.
புதியபூமி வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலில் பெண்கள் இயக்கத்திற்கு என்ன நடந்தது? என்ற ஆங்கில மூலக்கட்டுரை முதலாவதாக உள்ளது. பாரொ எப்ஸ்ரைன் எழுதிய இக்கட்டுரையை பேராசிரியர் சி.சிவசேகரம் தமிழாக்கம் செய்துள்ளார். தொடர்ந்து சிவசேகரம் எழுதிய மாக்சியமும் பெண்ணியமும் இலங்கையிற் பெண்ணுரிமையும் என்ற கட்டுரையும், க.தணிகாசலம் எழுதிய பெண் விடுதலை வேண்டும், சீதனமும் பெண்ணடிமையும் ஆகிய இரு கட்டுரைகளும், வெகுஜனன் எழுதிய பெண் விடுதலைக்கான இயக்கம் என்ற கட்டுரையும், ந.இரவீந்திரன் எழுதிய பண்பாட்டுத் தளத்தில் பெண் ஒரு முன்னுரை என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக சோ.தேவராஜா எழுதிய நாம் என்ன செய்யவேண்டும் என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. மேற்குறிப்பிட்ட ஏழு கட்டுரைகளும் பெண்நிலைவாதம் சார்ந்தவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 188885).