எஸ்.டி.சிவநாயகம், எஸ்.வி.பி.பிள்ளை (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 11: தமிழ் ஆட்சிப் பதிப்பகம், 156, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, மார்ச்; 1957. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்).
84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 17.5×12.5 சமீ.
தமிழ் ஆட்சிப் பதிப்பகத்தின் முதலாவது பிரசுரம். சட்ட மறுப்பு பற்றி காந்தி மகாத்மாவின் கருத்துக்களையும், ஈழத்து, தமிழகத்து, அரசியல் தலைவர்களின் கருத்துக்களையும் ஒன்று திரட்டி தமது கருத்துக்களுடன் இந்நூலில் பகிர்ந்திருக்கிறார்கள். இனி யாது, பொதுஜனச் சட்ட மறுப்பு, காந்திஜியின் ஒத்துழையாமைத் திட்டம், ஒத்துழையாமை இயக்கத்திலுள்ள பல அம்சங்கள், சுதந்திரப் பிரகடனம், செய் அல்லது செத்து மடி, சட்ட மறுப்பு ஒரு பூகம்பம், சௌரி சௌரா, காந்திஜியின் விண்ணப்பம், சிறீ எதிர்ப்பும் சட்ட மறுப்பும், எதற்காகச் சட்ட மறுப்பு, எந்தச் சட்டத்தை மறுப்பது (இரு அத்தியாயங்கள்), காந்தி மறுத்த உப்புச் சட்டம், சட்ட மறுப்பில் தலைவர்கள், எதிர் நடவடிக்கை, சட்ட மறுப்பு-அமைப்பு, பொறுமையும் தியாகமும் ஆகிய 18 தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37985).