சபா.ஜெயராசா. கொழும்பு 7: அகவிழி வெளியீடு, 3, டொறிங்டன் அவெனியு, 1வது பதிப்பு, மார்கழி 2006. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55, ஈ.ஏ.குரே மாவத்தை).
56 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21×15 சமீ.
21ம் நூற்றாண்டில் காலடி பதித்து நிற்கும் இலங்கையின் கல்வித் துறையில் கல்விசார் கொள்கைகளும் நடைமுறைகளும் பன்னாட்டு ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தும்வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. உலக சந்தையின் அழுத்தங்களுக்கு ஏற்றவாறு இயங்கத் தொடங்கிவிட்ட இன்றைய கல்வித்துறை, மனித வளம் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பராமரிக்கமுடியாத சுரண்டலுக்கு உள்ளாகும் நிலையால் பாதிக்கப்படுவதாகவும், உலகம் தழுவிய நுகர்ச்சிப் பண்டமாக கல்வி மாற்றம்பெற்றுள்ளதாகவும் கூறும் இந்நூல், இலங்கையில் அதிக பணத்தை உள்வாங்கி, குறைந்தளவு மக்களுக்கு நன்மை பயக்கும் பணியினை வழங்குவதாகக் குற்றஞ்சாட்டுகின்றது. இவற்றிற்கான மாற்றத்தினை நோக்கிய விழிப்புணர்வினை இந்நூல் வழங்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 196595).