திருநாவுக்கரசு கமலநாதன். யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ், 743, காங்கேசன்துறை வீதி, யாழ்.இந்துக் கல்லூரிக்கு முன்பாக).
(5), 106 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19.5×13.5 சமீ.
பிள்ளைகளுக்கான பாடசாலைகளை நம்பிக்கையுடன் தெரிவுசெய்தல், பாடசாலைகளை தெரிவுசெய்யும் தற்போதைய நடைமுறைகள், பாடசாலைகளை நம்பிக்கையுடன் தெரிவுசெய்யும் வழிமுறைகள், வெற்றிகரமான கற்றலுக்கான பாதைகள், கற்றல் நுட்பங்கள், வெற்றிகரமான கற்றலை மட்டுப்படுத்தும் காரணிகள், வாசிப்புப்பழக்கம், ளுஞ3சு வாசிப்பு முறைமை, இலகு வாசிப்புக்கான துரித வழிகள் ஆகிய தலைப்புகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கல்வியில் நம்பிக்கையையும் அதன்மூலம் வாழ்க்கையில் பெருவிருத்தியையும் அடைவதற்கு இந்நூல் உதவுகின்றது. கலாநிதி தி.கமலநாதன், தேசிய கல்வியியற் கல்லூரியில் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 236454).
14A29
பெற்றோர்களே பிள்ளைகளே. திருநாவுக்கரசு கமலநாதன். யாழ்ப்பாணம்: யாழ் நகர் கணித வட்டம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2017, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: வைரஸ் பிரின்டர்ஸ், இணுவில்).
xiii, 113 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. இரண்டு அத்தியாயங்கள் கொண்ட இந்நூலின் முதலாம் அத்தியாயத்தில் பிள்ளைகளுக்கான பாடசாலைகளை நம்பிக்கையுடன் தெரிவுசெய்தல், பாடசாலைகளை தெரிவுசெய்யும் தற்போதைய நடைமுறைகள், பாடசாலைகளை நம்பிக்கையுடனும் பொறுப்புடனும்; தெரிவுசெய்யும் வழிமுறைகள் ஆகிய மூன்று விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அத்தியாயத்தில், வெற்றிகரமான கற்றலுக்கான பாதைகள், வெற்றிகரமான கற்றல் நுட்பங்கள், வெற்றிகரமான கற்றலை மட்டுப்படுத்தும் காரணிகள், வாசிப்புப்பழக்கம், ளுஞ3சு வாசிப்பு முறைமை, இலகு வாசிப்புக்கான துரித வழிகள், ஓய்வுநிலைப் பெற்றோர்கள், வெளிநாடுகளில்-அனுபவ அலசல் ஆகிய தலைப்புகளின் கீழ் விளக்கமளிக்கப்பட்டுள்ளன. கல்வியில் நம்பிக்கையையும் அதன்மூலம் வாழ்க்கையில் பெருவிருத்தியையும் அடைவதற்கு இந்நூல் உதவுகின்றது. கலாநிதி தி.கமலநாதன், தேசிய கல்வியியற் கல்லூரியில் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார். (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9327).