சு.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, 1989, 1வது பதிப்பு, 1983, 2வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 BA தம்பி வீதி).
viii, 154 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20.5×13.5 சமீ.
பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே.) அவர்களின் இந்த இலக்கண நூல், 1986ஆம் ஆண்டு கல்வியமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையம் வெளியிட்ட ஆண்டு 9,10,11க்குரிய தமிழ் மொழிப் புதிய பாடத்தட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்டது. எழுத்து, சொல், சொல்லாக்கம், பெயர்ச்சொல், வேற்றுமை, வினைச்சொல், தெரிநிலை வினைவகை, குறிப்பு வினைவகை, பொது வினைகள், துணைவினையும் பிறவும், இடைச்சொல், உரிச்சொல், சொற்றொடர், புணர்ச்சி, வாக்கியம் அல்லது முற்றுத் தொடர்மொழி, வாக்கியத்தின் அகத் தொடர்புகள், வாக்கிய வகைகள், சிறப்பான சில அணிகள் (சொல்லணிகள், பொருளணிகள்) ஆகிய 18 அலகுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 81017).