கருணாகரன் வித்தியன், சிவமாலா வித்தியன். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6-5/3V, எட்வேர்ட் அவென்யூ, 1வது பதிப்பு, புரட்டாதி 2010. (கொழும்பு 6: ஆர்.எஸ்.ரி.என்டர்பிரைசஸ், 114, டபிள்யு. ஏ.சில்வா மாவத்தை).
iv, 58 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 16.5×12 சமீ.
இந்நூலில் நீரிழிவு நோய் என்றால் என்ன?, நீரிழிவு நோயின் அறிகுறிகளும் அதன் விளைவுகளும், நீரிழிவு நோயை இனங்காணுதல், நீரிழிவு நோய்உருவாகுவதற்கான காரணங்கள், நீரிழிவு நோயின் சிகிச்சை (வாழ்க்கை முறைகள், குளிசை மருந்துகள், இன்சுலின் ஊசி மருந்து), நீரிழிவு நோயினால் உருவாகும் உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள், நீரிழிவு நோயாளர்கள் கவனிக்கவேண்டிய பிற விடயங்கள், நீரிழிவு நோயைத் தடுத்தல் ஆகிய பிரதான விடயங்களை இந்நூல் விபரிக்கின்றது. மீரா பதிப்பகத்தினரின் 89ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 218242).