இரத்தினமலர் கயிலைநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: இரத்தினமலர் கயிலைநாதன், 1வது பதிப்பு, மார்கழி 1999. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், கந்தர்மடம்).
xi, 196 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ.
இலங்கைப் பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பித்தல் தொடர்பான கருத்துக்களை உள்ளடக்கிய ஈழத்துக் கல்வியியலாளர்களின் 11 ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. எம்.ஏ.எம்.நுஃமான், திருமதி பார்வதி கந்தசாமி, சு.சுசீந்திரராஜா, திருமதி சுபதினி ரமேஷ், திருமதி இரத்தினமலர் கயிலைநாதன் ஆகியோர் தனித்தும் இணைந்தும் இக்கட்டுரைகளை எழுதியுள்ளனர். ஆரம்ப வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல், ஐந்தாம் வகுப்பு மாணவர் தமிழ் மொழிப் பயிற்சிகளில் சில அவதானிப்புகள், தமிழ் மொழி கற்றல்-கற்பித்தலில் ஒத்த கருத்துள்ள சொற்களும் எதிர்க் கருத்துள்ள சொற்களும், மரபுத் தொடர்கள், லகர ஈற்றுப் புணர்ச்சி பற்றி ஓர் ஆய்வு, பாடநூல்களில் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும், பேச்சுத்தமிழ் பற்றிய மனப்பாங்குகளும் ஆரம்ப வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தலும் -மூன்று அணுகுமுறைகள், மொழியியலும் மொழி பயிற்றலும், மொழியியலும் மொழிப்பாடநூல் தயாரித்தலும், மொழி மாற்றமும் மொழி கற்பித்தலும், இலங்கையில் தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றலும் கற்பித்தலும் ஆகிய விடயங்கள் இக்கட்டுரையின் பிரதான கருக்களாக அமைந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129741).