9371 தமிழ் உரைநடைத் தெளிவு.

க.சொக்கலிங்கம், வாசுகி சொக்கலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, திருத்திய 3வது பதிப்பு, 2012, 1வது பதிப்பு, 1999, 2வது பதிப்பு, 2000. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 138 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-336-5.

க.பொ.த.சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு வழிகாட்டும் தமிழ் உரைநடை தொடர்பான கைந்நூல். வாக்கியத்திலே சொல்லொழுங்கு, எழுவாய், பயனிலை அமையவேண்டிய முறைமை, தோன்றா எழுவாய், தோன்றாப் பயனிலை, தோன்றாச் செயப்படுபொருள், எழுத்துக்களுக்கு ஒலியே அடிப்படை, ஆக்கச் சொற்கள், திரிசொற்கள், வேர்ச்சொற்கள், சொற்கள் சொற்றொடர்களின் அமைப்பில் புணர்ச்சிபெறும் இடம், சொற்களில் இடைவெளி விடலும் குறியீடுகளும், வழுவமைதி எனப்படும் மயக்கம், மரபு பேணுதல், நடையியல் ஆகிய பிரதான 12 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் உருவாக்கிய சில உவமை உருவகங்கள், கல்விப்பணி தொடர்பான கலைச்சொற்கள் சில, சில வடசொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் ஆகிய பின்னிணைப்புகளும் காணப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்