பொன்.கந்தசாமி. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி).
112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண) பரீட்சைக்குரிய தமிழ் இலக்கியம்-செய்யுள் தொகுப்பு, உரைநடைத் தொகுப்பு, கம்பராமாயணம் மந்தரை சூழ்ச்சிப் படலம், கைகேயி சூழ்வினைப் படலம், பாரதச் சுருக்கம் அணி இலக்கண எடுத்துக்காட்டு என்பவற்றுக்குரிய மாதிரி வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் மாணவர்கள் பரீட்சையிற் சித்தியடையக்கூடிய முறையிலே எழுதப்பட்டுள்ளது. இடம் சுட்டி விளக்கல், இலகுவான வசன நயங்கள், நடைகள், அணி இலக்கண எடுத்துக் காட்டுகள் என்பன தெளிவாகவும் நடைநலம் பொருந்தவும், எளிதில் மனதில் பதியக்கூடியதாகவும் உள்ளன. வித்துவான் பொன். கந்தசாமி யாழ்ப்பாண மாவட்டத்தில், மாதகலைச் சேர்ந்தவர்.