சி.தில்லைநாதன், குமாரசுவாமி சோமசுந்தரம் (ஆலோசகர்கள்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).
161 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
க.பொ.த.உயர்தர தமிழ் மொழி புதிய பாடத்திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இவ்வுரைநடைத்தொகுப்பு நூலில் 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் பற்றிய குறிப்பு, அரும்பத விளக்கம், பிரதான கருத்துக்களின் தொகுப்பு, விசேட விளக்கக் குறிப்புகள் மற்றும் பயிற்சிகள் என்பன நூலின் சிறப்பம்சங்களாகும். திருத்தொண்டர் பெரியபுராண வசன முகவுரை (ஆறுமுகநாவலர்), தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள் (பாரதியார்), தமிழர் கொள்கை (மறைமலை அடிகள்), மகாகவி பாரதியார் (வ.ரா.), கல்வி (திரு. வி.க.), இலக்கியச் சுவை (சுவாமி விவேகானந்தர்), ஆசிரியரை அடைந்தது (உ.வெ.சாமிநாதையர்), தமிழும் பிற மொழியும் (பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை), பண்பாடு (ராஜாஜி), ஓய்வுநேரம் (சி.என்.அண்ணாதுரை), தம்பிக்கு கடிதம்-1 (மு.வரதராசனார்), பாட்டும் ஓசையும் (சி.செல்வநாயகம்), பகீரதப் பிரயத்தனம் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), கலையும் காட்சியும் (ஏ.எம்.ஏ.அஸீஸ்), பிணைக்கப்பட்ட கடனை விட வெளிமுதலீட்டை வரவேற்பதே நலம் (ஏ.என்.சிவராமன்) ஆகிய தலைப்புகளில் பிரபல இலக்கியவாதிகளின் ஆக்கங்கள் இந்நூலின் கட்டுரைப் பகுதிகளாகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 123394).