பொன் கந்தசாமி. யாழ்ப்பாணம்: பொன் கந்தசாமி, சரவணபவ இல்லம், மாதகல், 1வது பதிப்பு, ஜுலை 1964. (யாழ்ப்பாணம்:ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).
84 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 21×14 சமீ.
மாதகல் கல்விமான் வித்துவான் பொன். கந்தசாமி அவர்கள் எழுதியுள்ள இந்நூல், க.பொ.த. உயர்தர பரீட்சைகளுக்குரியது. தமிழ்மொழிப் பாடத்தின் பரீட்சை வினாக்களுக்கு இலகுவான முறையில் விடை எழுதுவதற்கேற்ற வகையில், செய்யுள்களைப் பதச்சேதம் செய்து, பொருள் அறிந்து உரைநடை எழுதுவதற்கும், பொருட் சிறப்புகளையறிவதற்கும், செய்யுள்களில் வரும் தொகைச் சொற்கள், எச்சங்கள், முடிக்குச் சொற்கள் என்பனவற்றிற்கு இலக்கண முடிபுகள் கூறுவதற்கும், கட்டுரைப் பயிற்சி பெறுவதற்கும் ஆங்காங்கு தகுந்த பயிற்சிகள் இந்நூலில் எழுதப்பட்டுள்ளன.