சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சே.சிவசண்முகராஜா, 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுலை 2004. (யாழ்ப்பாணம்; பாரதி பதிப்பகம், 430, கே.கே.எஸ்.வீதி).
(2), 20 பக்கம், விளக்கப் படங்கள், விலை: ரூபா 40., அளவு: 20.5×15 சமீ.
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி, என்று கூறப்படுகின்ற எண்வகை யோகத்தில் ஆசனம் மூன்றாவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆசனம் என்றால் இருக்கை என்று பொருள். இந்தத் தூல சரீரத்தைச் சரியான இருக்கைமுறையில் பழக்கப்படுத்துவதே ஆசனப் பயிற்சியின் நோக்கமாகும். அவ்விதம் பழக்கப்படுத்துவதன் மூலம் நோயற்ற வாழ்வு வாழ முடியும். யோகசாஸ்திரங்களில் ஆசனங்கள் நூற்றெட்டு வகையாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் இலகுவானதும் உடல்நலத்துக்கு உதவக்கூடியதுமான சில ஆசனங்கள் பற்றி இந்நூலில் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. பதுமாசனம், வஜ்ராசனம், புஜங்காசனம், சலபாசனம், தனுராசனம், பச்சிமோத்தாசனம், மயூராசனம், பாதஹஸ்தாசனம், திரிகோணாசனம், ஹலாசனம், சிரசாசனம், ஏகபாதாசனம், சர்வாங்காசனம், மச்சாசனம், சாந்தியாசனம் ஆகிய 15 ஆசன வகைகள் பற்றித் தனித்தனி இயல்களில் இந்நூல் சுருக்கமாக விளக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 152059).