9454 தாயும் பிள்ளையும்.

ச.இராசரத்தினம். யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி ச.இராசரத்தினம், பிரசாந்தி, கொக்குவில், 2வது பதிப்பு, 1974, 1வது பதிப்பு, 1934. (கொக்குவில்: சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலை).

(16), 88 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 5.00, அளவு: 21.5×14 சமீ.

இலங்கைத் தமிழரால் எழுதப்பட்ட மகப்பேற்று மருத்துவம் தொடர்பான முன்னோடி நூல். கை வைத்தியமுறைகளையும் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளையும் பாட்டி வைத்திய முறைகளையும் சாடி, முப்பதுகளில் நவீன மருத்துவத்துறையை மக்கள் மத்தியில் பரப்பும் சமூக அக்கறையுடன் இந்நூல் எழுதப்பட்டது. பிரசவகாலம், கர்ப்;போற்பத்திக்கு உதவும் அவயவங்களும் தொழில்களும், கர்ப்பவதியில் ஏற்படும் மாறுதல்கள், போலிக் கர்ப்பம், கர்ப்பவதி கவனிக்கவேண்டியவை, கர்ப்பவதியில் ஏற்படும் சில பிணிகள், காலங்கழித்தும் வயிற்றுள் சிசு, வயிற்றுள் இறங்கும் சிசு, பிரசவகாலம் வந்தெய்தியதும், பிரசவத்துக்குப் பிள்ளை எடுக்கும் காலம், நஞ்சுக்கொடி வெளிவர எடுக்கும் நேரம், பிரசவம் நடக்கும் பொழுதும் பின்பும், தாய்க்கு ஏற்படும் நோய்கள், பிள்ளi பிறந்தவுடன், பிள்ளையை நீராட்டல், நாபிக்கொடி, காலமாகாது பிறக்கும் குழந்தை, பிள்ளையின் பால், பால் கொடுக்கும் முறை, தாயின் பாலை இழந்த சேய், பிள்ளையின் மற்றைய தேவைகள், பிள்ளையின் வளர்ச்சி, பால் மறப்பித்தல், பிள்ளைக்கு ஏற்படும் நோய்கள், பிறவியில் ஏற்படும் குறைகள், யார் இந்தப் பிள்ளை, தேர்ந்தெடுக்கும் திருமணம், கர்ப்பமும் நீரழிவும், கர்ப்பமும் சயரோகமும், ஆணா அல்லது பெண்ணா, பாட்டியின் பிடியிலிருந்து தாயை விடுவிக்க இவை, மலடு, தேவையற்ற பிள்ளை, தொற்றுநோய்த் தடுப்பு முறைகள் ஆகிய 34 தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 118889).                                                                              

ஏனைய பதிவுகள்

Kia Rio 5 Deposito Agua MercadoLibre

Content Better Internet casino Australia, Bien au A contemporâneo income Gambling enterprises – Box of Ra $ 1 depósito Posso jogar no cassino online com