ஏழாலை ஐ.பொன்னையாபிள்ளை (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம், சுகாதார அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2000. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாண அரசு).
xvi, 227 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:21.5×14 சமீ.
1380-1414 காலகட்டத்தில் யாழ்ப்பாண சிங்கைநகரை ஆட்சிசெய்த செகராசசேகரன் காலத்தில் வடமொழியிலிருந்து தமிழில் பாவடிவில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சித்த வைத்திய நூல். செய்யுள் உருவில் அமைந்த இந்நூலின் அத்தியாயங்கள், வியாதி வரும் வகை, உணவுவகை, நாடி விதி, வாத பித்த கரம், பித்த சிலேட்டுமத்தின் குணமும் மருந்தும், என இன்னோரன்ன 18 தலைப்புகளிலும், சன்னி விதி என்ற தலைப்பின்கீழ் சன்னி பதின்மூன்றின் குணமும் மருந்தும், மூலவியாதியின் குணமும் மருந்தும், விக்கலின் குணமும் மருந்தும் என இன்னோரன்ன பதினைந்து தலைப்புகளிலும் இச்செய்யுள்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. மல்லாகம், திருஞானசம்பந்தர் அச்சியந்திரசாலையில் 1935 இல் இந்நூல் முதற்பதிப்புக் கண்டது. 2000ஆம் ஆண்டில் மீள்பதிப்புக்கண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 161199).