திமிலைக் கண்ணன். மட்டக்களப்பு: இராஜம் பிரசுரம், திமிலைத் தீவு, 1வது பதிப்பு, வைகாசி 1971. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).
32 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 19×12.5 சமீ.
திமிலைக்கண்ணன் இறையருள் பற்றிப்பாடும் கிழக்கிலங்கையின் ஆன்மீகக் கவிஞராக அறிமுகமானவர். இவரது கவிதைகள் ஆத்மஜோதி, விவேகி உள்ளிட்ட ஈழத்துச் சிறுசஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இக்கவிதைகளின் தேர்ந்த தொகுப்பாகவும் ஆசிரியரின் முதலாவது நூலாகவும் இது வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 8345).