9638 மூங்கில் கூடை: கவிதைகள்.

கோ.கிசோகுமார். கொழும்பு: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், இணை வெளியீடு, தலவாக்கல்லை: தலவாக்கலை தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 11: அறிவொளி கிரபிக்ஸ், 189, செட்டியார் தெரு).

xiv, 77 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-955-97102-4-0.

மலையக இளம் படைப்பாளியான கிசோகுமார், நுவரெலிய டிரைட்டன் தோட்டப் பாடசாலையிலும், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் டிப்ளோமாக் கல்வியை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பெற்ற பின்னர் நுவரெலிய மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். மூங்கில் கூடை, மலையக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கவிதைகளைக் கொண்டது. மலையக மக்களின் வாழ்வு நிலை, வறுமை, சமூக ஊழல்கள், சிறுவர் உழைப்பு, உலகமயமாதல், தாய்ப்பாசம், காதல் என்று அவரது பார்வை விரிகின்றது.

ஏனைய பதிவுகள்