9682 கொழுத்தாடு பிடிப்பேன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்.

அ. முத்துலிங்கம் (மூலம்), க.மோகனரங்கன் (தேர்வும் தொகுப்பும்). தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600005: மணி ஓப்செட்).

486 பக்கம், விலை: இந்திய ரூபா 390., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81969-86-1.

அ.முத்துலிங்கத்தின் தேர்ந்த 45 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. இதில் குதம்பேயின் தந்தம், ஒரு சாதம், வம்ச விருத்தி, வடக்கு வீதி, பூமாதேவி, யதேச்சை, ஒட்டகம், கொழுத்தாடு பிடிப்பேன், அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை, மொசு மொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள், தாத்தா விட்டுப்போன தட்டச்சு மெசின்,போரில் தோற்றுப்போன குதிரைவீரன், பூமத்திய ரேகை, எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை, மகாராஜாவின் ரயில்வண்டி, நாளை, தொடக்கம், ஆயுள், விருந்தாளி, அம்மாவின் பாவாடை, கறுப்பு அணில், எதிரி, ஐந்தாவது கதிரை, தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில், ராகு காலம், தாழ்ப்பாள்களின் அவசியம், புவியீர்ப்புக் கட்டணம், வேட்டை நாய், புகைக் கண்ணர்களின் தேசம், சுவருடன் பேசும் மனிதர், மயான பராமரிப்பாளர், அமெரிக்கக்காரி, குதிரைக்காரன், மெய்க்காப்பாளன், ஐந்து கால் மனிதன், புளிக்கவைத்த அப்பம், எங்கள் வீட்டு நீதவான், தீர்வு, எல்லாம் வெல்லும், மூளையால் யோசி, சூனியக்காரியின் தங்கச்சி, நிலம் எனும் நல்லாள், ரயில் பெண், ஓணானுக்குப் பிறந்தவன், எலிமூஞ்சி ஆகிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  யாழ்ப்பாணத்தின் கொக்குவில் கிராமத்தில் 1937இல் பிறந்த முத்துலிங்கம் கொழும்புப் பல்கலைக்கழத்தில் விஞ்ஞானப்படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளர் படிப்பையும், பிரித்தானியாவில் பட்டய நிர்வாகக்கல்வியையும் பூர்த்தி செய்தபின்னர் இலங்கை, ஆபிரிக்கா மற்றும் பல நாடுகளில் ஐ.நா.நிறுவனத்திற்காகப் பணியாற்றியவர். 2000இல் ஓய்வுபெற்று கனடாவில் வாழ்கின்றார்.

ஏனைய பதிவுகள்