ம.இரகுநாதன். யாழ்ப்பாணம்: எழில் பதிப்பகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 424, காங்கேசன்துறை வீதி).
x, 107 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-52012-0-9.
பேராசிரியர் கலாநிதி ம.இரகுநாதன் எழுதியுள்ள இந்நூல் தமிழ் இலக்கியத்தைக் கற்கும் உயர் கல்வி மாணவர்களுக்கு தமிழ்ப்பாவடிவங்களை எளிய வடிவில் அறிமுகப்படுத்துகின்றது. செய்யுளும் யாப்பும் என்ற அறிமுகத்துடன் தொடங்கு இந்நூலில், செய்யுள் உறுப்புக்கள் (எழுத்து, அசை, சீர், தளை,அடி, தொடை), பாவகைகள் (குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா), ஆசிரியப்பா (நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலை மண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா), கலிப்பா (வண்ணக ஒத்தாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசை, நேரிசை ஒத்தாழிசை, வெண்கலிப்பா, கலிவெண்பா, கொச்சகக் கலிப்பா), வஞ்சிப்பா, பாவினம் (வெண்பாவினம்: குறட்டாழிசை, வெண்டாழிசை, வெள்ளைச் செந்துறை, வெண்டுறை, வெளிவிருத்தம்), ஆசிரியப்பாவினம் (ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம்), கவிப்பாவினம் (கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம், கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித்துறை), வஞ்சியினம் (வஞ்சித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம்), புதிய செய்யுட்கள் (சிந்து, கும்மி) ஆகிய 11 இயல்களில் தமிழ்ப்பாவடிவங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.