த.தியாகராசா. யாழ்ப்பாணம்: மனோகரி கல்வி வெளியீட்டகம், கொழும்புத்துறை, 2வது பதிப்பு, வைகாசி 1969, 1வது பதிப்பு, தை 1969. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235. காங்கேசன்துறை வீதி).
(2), 184 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.75, அளவு: 20.5×13.5 சமீ.
நூலாசிரியர், ஆறாம் வகுப்பின் மூன்று தவணைகளுக்கும் உரிய பாடங்களைப் பிரித்து மூன்று பிரிவுகளாக விளக்கியுள்ளார். முதலாம் தவணைப்பிரிவில் புவி, பொது ஆசியா அறிமுகம், ஆசியாவின் குடியடர்த்தியும் இயற்கைப் பிரிவுகளும், ஆசியாவின் காலநிலை, தேயிலை பயிரிடுவோர், மீன்பிடிப்போர் அல்லது சேனைப் பயிர்ச்செய்கை அல்லது யாழ்ப்பாணக் கமக்காரன் ஆகிய பாடங்களும், இரண்டாம் தவணைப்பிரிவில் இந்தியாவும் பாக்கிஸ்தானும், தென்கிழக்கு ஆசியா, சீனாவும் அயல்நாடுகளும், யப்பான், இலங்கையில் நெற்செய்கை, இறப்பர்ச் செய்கை, இரத்தினக் கற்கள், உப்பு ஆகிய பாடங்களும், மூன்றாவது தவணைப் பிரிவில் இரசிய சைபீரியா, மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, அவுஸ்திரேலியாவின் தரைத் தோற்றம், செம்மறியாட்டு வளர்ப்பு, கோதுமை விளையும் பகுதி, கிழக்கு மாகாணங்கள், நியூசிலாந்து, தென்னைச் செய்கை, எமது காரீயம், எமது சீமெந்துத் தொழில் ஆகிய பாடங்களும் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 85441).