த.தியாகராசா. யாழ்ப்பாணம்: உயர்கல்வி வெளியீட்டகம், 124, பிரதான வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஆவணி 2003. (யாழ்ப்பாணம்: ராம் பிரின்டர்ஸ், 51, இலுப்பையடிச் சந்தி, பலாலி வீதி).
iv, (2), 152 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ.
இந்நூல் க.பொ.த. உயர்தர வகுப்பு புவியியல் பாடத்திட்டத்தின் பிரிவு 2க்குரிய சூழற் புவியியலைத் தழுவி எழுதப்பட்டது. சூழலும் மனிதனும், புவித்தொகுதி, உயிர்த் தொகுதியும் சுற்றாடற் சமநிலையும், தரைத்தோற்ற அம்சங்களும் இயல்புகளும், புவியின் அகவிசைகளும் விளைவுகளும், புவியின் புறவிசைகளும் செயற்பாடுகளும், இலங்கையின் புவிச்சரிதவியற் பின்னணி, நீர், வளிக்கோளம், புவியிற் சூழற் சீர்கேடுகளும் மாற்றங்களும், சூழற் பாதிப்பும் பாதுகாப்பும், நிலையான அபிவிருத்தி, சமய சிந்தனையும் சியற்றில் கூற்றும் ஆகிய 13 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 190390).