மு.உமாசங்கரி (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சி.முத்துக்குமாரன், 411/2 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1989. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சகம், 450, காங்கேசன்துறை வீதி).
48 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இலங்கைச் சைவ மக்களின் பெருமைக்குரிய ஸ்தாபனங்களான யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, இந்துசாதனம், யாழ். இந்துக் கல்லூரி ஆகிய இம்மூன்றும் நூற்றாண்டு விழாவை நடாத்தும் வேளையில் இம்மூன்று ஸ்தாபனங்களுடன் இணைந்து ஆக்கபூர்வமான பணிகள் பல புரிந்து பெருந்தொண்டாற்றிய வண்ணார் பண்ணை, உயர்திரு சித. மு.ப.சிதம்பரநாதச் செட்டியார் அவர்களின் நூற்றாண்டு ஜயந்தி தினமும் 09.09.89 அன்று நினைவுகூரப்பட்டது. அதன் நினைவாக இம்மலரும் வெளியிடப்பட்டது.