எஸ்.இலக்குமி. கண்டி: திவ்ய ஜீவன சங்கம், சச்சிதானந்த தபோவனம், தன்னக்கும்பரை, 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்).
liii, 440 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
கண்டி திவ்ய ஜீவன சங்கத்தின் சார்பாக பண்டிதை எஸ்.இலக்குமி அவர்கள் எழுதியுள்ள வாழ்க்கை வரலாற்று நூல். இமயஜோதி ஸ்ரீ சிவானந்தரின் சீடர்களுள் ஒருவரான ஸ்ரீ சுவாமி சச்சிதானந்த யோகிராஜ் அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றியதாக நான்கு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முதற்பாகம் சுவாமிகளின் திவ்விய வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் அறிமுகம், வீட்டிற் கல்வி, துறவற நாட்டம், 1950இல் அகில இந்திய யாத்திரை, இலங்கையில் யோகிராஜ், தோட்டப் பகுதிகளில் பணிகள் ஆகிய உப தலைப்புகளில் விபரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் சுவாமிகளின் அருளுரைகளை உள்ளடக்குகின்றது. மூன்றாம் பாகம் அவரது பாடல்களையும், நான்காம் பாகம் அவரது பணிகள் தொடர்பான பத்திரிகைச் செய்திகளயும் தொகுத்து வழங்குகின்றது. பின்னிணைப்புகளாக வாழ்த்துரைகளும், கட்டுரைகளும், சுவாமிகள் சார்ந்த பணிகள் தொடர்பான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22747).