எஸ்.பி.கிருஷ்ணன். சாவகச்சேரி: பாபு வெளியீடு, கண்ணன் கொட்டேஜ், மட்டுவில் தெற்கு, 1வது பதிப்பு, மே 1976. (யாழ்ப்பாணம்: நாவலன் பதிப்பகம், 535 பருத்தித்துறை வீதி, நல்லூர்).
(4), 50 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ.
வீரகேசரி, தினகரன், ஈழநாடு நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. இதில் ஆசிரியர் தான் தரிசிக்கும் நல்லார் சிலரையும் வல்லார் சிலரையும் பற்றிய வாழ்வும் பணிகளும் இடம்பெற்றுள்ளன. கு.வன்னியசிங்கம், ந.அருணாசலம் (அதிபர்), அறிஞர் அண்ணாத்துரை, வ.உ.சிதம்பரபிள்ளை, சுபாஷ் சந்திரபோஸ், மார்ட்டின் லூதர் கிங், போன்றோரின் வரலாற்றுச் சித்திரங்களை இக்கட்டுரைகள் உள்ளடக்கியன. உள்ளம் கவர்ந்த ஆசிரியப் பெருந்தகை, அண்ணா என்ற மூன்றெழுத்து, இரத்தத்தைக் கொடுங்கள் விடுதலை தருகிறேன், வாழ்க தமிழ்மகன் புகழ், தமிழினத்தைத் தட்டியெழுப்பிய பாவேந்தர், வெள்ளையனே வெளியேறு என்ற வீரத் தமிழன், தூக்கு மேடை ஏறவும் தயார், அறப்போர் வெற்றி கண்டது அமெரிக்காவில் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இந்நூலுக்கான அணிந்துரையை பேராசிரியர் அ.சண்முகதாஸ் வழங்கியிருந்தார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35207).