9947 அமைதியான இலங்கைக்கு சமஷ்டி ஆட்சிமுறையின்மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு.

சுதந்திர தொழிற்சங்க அபிவிருத்திக்கான நிலையம். கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி,  1வது பதிப்பு, (ஆண்டு விபரம் தரப்படவில்லை). (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xiii, 9 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அனுசரணையுடன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கோட்பாட்டு நிபுணத்துவம் பெற்ற ஐவரின் பங்களிப்புடன் ஆங்கில மூலத்தில் எழுதப்பட்ட ஐந்து நூல்களில் ஒன்று இதுவாகும். பேராசிரியர் குமார் டேவிட்டின்  ஆய்வுரையொன்றுக்கு அமைய தயார் செய்யப்பட்டது.  மொழிபெயர்ப்பினை  இந்திராணி கோவிந்தசாமி, ஏ.ஜே.கனகரத்தினா, கே.நடேசன், வைரமுத்து சுந்தரேசன் ஆகியோர் இணைந்தும் தனித்தும் மேற்கொண்டார்கள்.  இக்கைநூல் தொடர்பாக ஜீ.வீ.டீ.திலக்சிறியின் அறிமுகத்துடன்  வெளியிடப்பட்டுள்ள இச்சிறுநூலில் நாம் இன்னொரு யுத்தத்தைச் சந்திக்க வேண்டும் என்பதை மீண்டும் சிந்தித்துப் பார்ப்போம்,  சமஷ்டி ஆட்சிமுறை இனப்பிரச்சினைக்கான தீர்வாகும் ஆகிய இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40415).

ஏனைய பதிவுகள்