9954 ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை.

பி.இரயாகரன். பிரான்ஸ்: சமர் வெளியீடு, 32, Rue Trouillet Derel, 92600, Asnieres Sur-Seine, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சென்னை 600024: எமில் பிரிண்டர்ஸ், 63, என்.எஸ்.கே.சாலை, கோடம்பாக்கம்).

(4), 204 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21.5×14 சமீ.

இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்று காணப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஏற்பட்ட 2002 காலகட்டத்தைத் தாண்டிய இரண்டாண்டுகள் கழிந்த நிலையில் எழுதப்பட்ட இந்நூலில் சமகால இலங்கை எப்படி மறுகாலனியாதிக்கத்தினுள் சென்றுவிட்டது என்பதை ஆதாரங்களுடன் முன்வைக்கப்படுகின்றது.  இவ்வாய்வு மூன்று பகுதிகளைக் கொண்டது. சமாதானமா யுத்தமா இது யாருக்காக? மக்களுக்காகவா மூலதனத்துக்காகவா? என்ற கேள்விகளையெழுப்பி இந்நாடகம் சோகமான முடிவை நோக்கி நகர்த்தப்படுவதாக முதல் பகுதி விமர்சிக்கின்றது. சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சிநிரல் பற்றி இரண்டாம் பகுதி விபரிக்கின்றது. இப்பிரிவில் சிங்கள இனவாத அரசு திட்டமிட்ட வகையில் தேசியத்தின் அனைத்துப் பண்பியல் கூறுகளையும் அழிக்கின்றது எனவும், மேட்டுக்குடி வெள்ளையரின் சுற்றுலாக்கள் பற்றியும், அவர்களின் வீடுகளுக்கே சென்று சேவகம் செய்யக் காத்திருக்கும் தேசியம் பற்றியும், மக்களைக் குடிகாரர்களாக்கி, இலங்கைஅரசே அவர்களுக்குக் கல்வியை மறுப்பதைத் தேசியமயமாக்குவது பற்றியும், சமூகச் சீரழிவினால் உருவாகும் சிதைந்த பண்பாட்டின் ஆழமான எதிர்விளைவுகள் பற்றியும், இலங்கையில் ஊடுருவிப் பாயும் ஏகாதிபத்தியத்தின் பெருநிதிகள் பற்றியும், அத்துமீறும் அமெரிக்கத் தலையீடு பற்றியும் இவ்வியல் விரிவாகப் பேசுகின்றது. மூன்றாம் பகுதி இனம்கடந்த அரசியல் விபச்சாரம் மக்களின் முதுகில் சவாரி செய்கின்றது என்ற தலைப்பில் அரசியல் தலைவர்களான சந்திரிகா-ரணிலுக்கிடையில் உள்ள அதிகாரப் போட்டி, கூட்டணிக்குள் புலிகளின் அதிகாரப் போட்டி, முஸ்லிம் காங்கிரசுக்குள் நடந்த அதிகாரப் போட்டி, ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்குச் செங்கம்பளம் விரிக்கும் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான புலிகளின் தீர்வுத்திட்டம் பற்றியும், சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாதம் பற்றியும், பன்னாட்டுச் சிதைவுகள் தமிழினத்தையே அழிக்கும் நிலைபோன்ற  இன்னோரன்ன விடயங்களையும் விளக்கிநிற்கின்றது.

ஏனைய பதிவுகள்

13513 ஆரோக்கியமான புதிய உணவுகள்.

சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை. யாழ்ப்பாணம்: சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: வடமாகாண சுகாதார அமைச்சு, 1வது பதிப்பு, மாசி 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2,