ஜனநாயகத்துக்கும் சமாதானத்துக்குமான தமிழ்பேசும் மக்களின் அரங்கு. கொழும்பு 13: ஜனநாயகத்துக்கும் சமாதானத்துக்குமான தமிழ்பேசும் மக்களின் அரங்கு, 161, ஜிந்துப்பிட்டி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2003. (பொறல்லை: சீயா அச்சகம்).
16 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 21×13.5 சமீ.
இலங்கையில் சமாதான முயற்சிக்குத் தடையாக உள்ள சகல காரணிகள் பற்றியும் மக்கள் தெளிவாக அறிந்திருக்கவேண்டும். அப்போதுதான் சகல தடைகளையும் அகற்றி நியாயமான அரசியல் தீர்வை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுமாறு தங்கள் அரசியல் தலைமையை மக்கள் வற்புறுத்த முடியும். அதே நேரம், நியாயமான அரசியல் தீர்வு பற்றிய தெளிவான சிந்தனை மக்களிடம் இருக்கவேண்டியதும் அவசியம். இவ்விரு நோக்கங்களையும் மனதில் இருத்தி இப்பிரசுரத்தை கொழும்பிலிருந்து, ஜனநாயகத்துக்கும் சமாதானத்திற்குமான தமிழ்பேசும் மக்களின் அரங்கு என்ற அமைப்பினர் தமது முதலாவது பிரசுரமாக வெளியிட்டுள்ளனர்.