ஏ.ஈ.சீ.இராசரெத்தினம். மன்னார்: கிராம முன்னேற்றச் சங்கம், கற்கடந்த குளம், முருங்கன், 1வது பதிப்பு, ஜுன் 1973. (மன்னார்: வீ.ஆர்.டொமினிக், மன்னார் அச்சகம்).
(20), 206 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×13 சமீ.
சான்றார் எனப்படும் வட இந்திய திராவிட சமூகத்தினரின் ஆதி வரலாறு பற்றிக் கூறும் இந்நூல் மைசூரில் சான்றார் ஆட்சி, கன்னடத்தை ஆட்சிசெய்த சான்றார் வம்சம், சோழ வம்ச நாடார்களின் வரலாறு, பாண்டிய நாட்டில் நாடார் மன்னர்களின் எழுச்சி, பாண்டிய நாட்டில் நாடார் மன்னர்களின் வீழ்ச்சி, சேர நாட்டில் சான்றார்களின் அரசு, இலங்கையில் சான்றார் ஆட்சி, துராவ எனப்படும் சிங்களச் சான்றார்கள், தமிழர் மத்தியில் சாதி முறை, இலக்கியத்தில் சான்றார் வம்சம், சான்றாரைப்பற்றி ஐரோப்பிய இந்திய அறிஞர்கள், சான்றார் சூரிய குலத்தவரா? சாதியிலுள்ள பட்டங்களும் தொழில்களும் உட்பிரிவுகளும், 20ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுக்குத் தொண்டாற்றிய நாடார் குலத்தவர் ஆகிய பதினைந்து இயல்களில் சான்றார் வம்சத்தை ஆய்வுக்குட்படுத்துகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2730).