சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: கலாநிதி சே.சிவசண்முகராஜா, 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்டர்ஸ், பலாலி வீதி).
xvi, 139 பக்கம், தகடுகள், விலை: ரூபா 450., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-44239-3-0.
கந்தரோடைப் பிரதேசத்தில் குடியேறியிருந்த பூர்வகுடிகளான மக்கள், பண்பாட்டில் முன்னேறியவர்களாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட பல நூற்றாண்டுகளிலிருந்தே பிற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டவர்களாகவும், உலோகத்தின் உபயோகத்தை அறிந்தவர்களாகவும் வாழ்ந்திருந்தனர் என்று வரலாற்றாசிரியர் கா.இந்திரபாலா குறிப்பிட்டுள்ளார். அத்தகு தொன்மைவாய்ந்த கந்தரோடைப் பிரதேசம் பற்றிய பின்னைய மற்றும் சமகால பிரதேச வரலாற்றை இந்நூல் பதிவுசெய்கின்றது. நுழைவாயில், அறிமுகம், கந்தரோடையின் அயற்கிராமங்கள், கந்தரோடை பெயர்க்காரணம், நீர்வளம், வழுக்கையாறு, கந்தரோடையிலுள்ள குறிச்சிகள், கந்தரோடை மக்கள், கல்விச் செல்வம், கந்தரோடையில் மகாத்மா காந்தி, ஆலயங்கள், கந்தரோடையில் புதைபொருள் ஆய்வுகள், கந்தரோடை மன்னர், கந்தரோடையும் பௌத்தமதச் சின்னங்களும், பொதுவான விடயங்கள் சில, கந்தரோடை மண்ணின் புகழ்பூத்த மாந்தர்கள், முடிவுரை ஆகிய 17 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கந்தரோடைக் கிராமத்துக் கோயில்களின் ஊஞ்சல் பாக்களும், பாடசாலை கீதங்களும், பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 234400).