பரமு புஷ்பரட்ணம். கந்தரோடை: நிறுவுநர் அம்பலவாணர் கந்தையா நினைவுப் பேருரை, யாழ்/கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலை, கந்தரோடை, சுன்னாகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ.
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் மாணாக்கருள் ஒருவரான அம்பலவாணர் கந்தையா (16.6.1869-3.8.1951) அவர்கள் மறைவின் 50 ஆண்டுகளை நினைவுகூர்ந்து, அவர் தாபித்திருந்த தமிழ்ப் பாடசாலையினால் ஒழுங்குசெய்யப்பட்ட நிறுவுநர் நினைவுப் பேருரை 3.8.2001 அன்று நிகழ்த்தப்பட்டது. அச்சிறப்புரையினை ஆற்றியவர் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முதுநிலை விரிவுரையாளர் பரமு புஷ்பரட்ணம் அவர்கள். அவரது உரையின் நூல்வடிவம் இதுவாகும்.