மேரி புஷ்பம் மருது கந்தப்பு. நெடுந்தீவு: ஹோட்டல் சமுத்ரா, 1வது பதிப்பு, மாசி 2014. (யாழ்ப்பாணம்: மெகா டிஜிட்டல்).
xii, 28 பக்கம், தகடுகள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளுள் ஒன்றான நெடுந்தீவு பற்றிய நூல் இது. பசுந்தீவு, பசுத்தீவு, பால்தீவு என்று முன்னர் வழங்கிய காரணப் பெயர்களுடன் ஒல்லாந்தர் ஆட்சியில் டெல்ப் னுநடகவ என்ற பெயரையும் தாங்கியிருந்தது. இந்நூலில், என் தாய் மண், பாரம்பரிய விளையாட்டுக்கள், பசுத்தீவா பசுந்தீவா, சுயமுயற்சி, விவசாயம், மண்ணின் மைந்தர்கள், மத வழிபாடு, கடற்போக்குவரத்து, கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு, பொற்காலம், நினைவுச் சின்னங்கள், எனது நிலைப்பாடு ஆகிய தலைப்புகளின் கீழ் தன் தாய்மண்ணின் சிறப்புகளையும் தன் மண்மீது கொண்ட பிணைப்பினையும் இணைத்து இந்நூலை உருவாக்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 236003).