13884 தேவ அமுதம்: இறைபணிச் செம்மல் வை.செ.தேவராசா அவர்களின் அமுதவிழா மலர்.

அகளங்கன் (மலராசிரியர்). வவுனியா: அமுதவிழாக் குழு, இல. 59, வைரவர் கோவில் வீதி, வைரவபுளியங்குளம், 1வது பதிப்பு, ஜுலை 2017. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி).

84 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18 சமீ.

வவுனியாவில் இந்துமாமன்றம் மற்றும் மணிவாசகர் சபையின் தலைவர் வை.செ.தேவராசா அவர்களின் 80வது அகவை அமுதவிழா வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் 22.07.2017 அன்று நடைபெற்றது. அவ்வேளையில் இம்மலர் வெளியிடப்பட்டது. வை.செ. தேவராசா அவர்கள் யாழ்  தீவுப்பகுதி  வேலணையை பிறப்பிடமாகவும்  தொழில் நிமித்தம் 1960 ஆம் ஆண்டு   வவுனியாவிற்கு  வருகைதந்து  தொடர்ச்சியாக வன்னி மண்ணில் சைவசமயத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவராய் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களின்  வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டதுடன் ஆலயங்கள் தோறும்  திருவாசக முற்றோதல் நிகழ்வுகளை நடத்தி வந்துள்ளமையும்  வவுனியாவில்  இந்துமாமன்றம் சுத்தானந்த இந்து இளைஞர்  மன்றம் என்பவற்றை உருவாக்குவதிலும்  முன்னின்று செயற்பட்டவர். சமாதான நீதிவானாகிய வை.செ.தேவராசா அவர்கள் திருவாசகச் செல்வர், வாதவூரரின் பாதசேகரன், திருமுறைச் செல்வர், இறைபணி வேந்தன், ஈழத்துச் சிவத்தொண்டன், பெரியபுராண மாமனிதர், திருவாசக கலாநிதி, கலாபூசணம், இறைபணிச் செம்மல் ஆகிய பட்டங்களை தனது வாழ்நாளில் பெற்றுக்கொண்டவர். இம்மலரில் இப்பெரியாருக்கு பல்வேறு தரப்பினரும் வழங்கிய ஆசிச் செய்திகள், வாழ்த்துரைகள் என்பன இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Maria Casino anrette fri online

Content Nye nettcasinoer betaler bedre Olika typer ikke i bruk casinobonusar Av den grunn gjør du uttak Gave med uttak iblant Playerz Casino Oppgraderingen ble