வெற்றிவேல் விநாயகமூர்த்தி. மட்டக்களப்பு: முத்தமிழ்ப் பண்ணை, 2, வன்னியனார் தெரு, 1வது பதிப்பு, மார்கழி 1994. (மட்டக்களப்பு: நியூ கீன், 73, முனைத்தெரு).
xii, (7), 93 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 18×12 சமீ.
எளிய முறையில் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்களை விளக்குவதாக அமையும் 34 சிறு கட்டுரைகளினதும் இரு பாடல்களினதும் தொகுப்பு இதுவாகும். சுவாமி நூற்றாண்டு விழாக்கள், தலையெடுத்தாடும் தகாத செயல்கள், சந்தர்ப்ப சமயவாதிகள் சிலர், சமயமும் ஆன்மீகமும், ஆன்மாவின் நிலை, உள்ளத்தே உள்ளது, துணிந்துசெல்ல எழுச்சியூட்டல், பரம்பொருள், ஆன்மா பரம்பொருளே, சொர்க்கம் நமக்குள்ளே, சச்சிதானந்தம், மனித தெய்வத்தன்மை, மூடநம்பிக்கை, ஒடுக்கமும் விரிவும், அறிவு-மனம்-ஆவி, விதி என்பதெது, மனிதப் பிறவியும் மறுபிறவியும், பிராணன், அழியா மனப்பதிவு, கடவுள் எங்கே?, இணையற்ற பாடல், மனங்களைப் புரட்டிய மதப்பிரசங்கம், கவித்துவம் மிகுந்த கவிஞர்கள், விவேகானந்த அலைக்குள் விபுலானந்தர், உணவும் உடம்பும், ஏழைக்கிரங்கும் இதயங்கள், கடவுளைத் தேடி, பிணம் என்று இகழாதீர், ராஜயோகத்தில் சில, விவேகானந்தர் சம்பாஷணைகள், சுவாமியை வலியுறுத்தும் வசனங்கள் சில, சுவாமி விவேகானந்தர் ஜீவிதத்தில் சில, சுவாமியின் பொன்மொழிகள் சில, இராமகிருஷ்ண மிஷன் (பாடல்), இல்லறத் துறவற இயல்பு (பாடல்), மீண்டும் நினைவுகூர்தல் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 111531).