க.அஞ்சுகம் (மூலம்), வ.மகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xlviii, 220 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-9233-21-3.
உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு.
க.அஞ்சுகம் (மூலம்), வ.மகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 3வது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 1910, 2வது பதிப்பு, 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
lvi, 206 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-9233-21-3.
1910இல் வெளிவந்த மூலநூலின் மீள்பதிப்பு இதுவாகும். முற்காலத்தில், தேவர் அடியார்களாக (பிற்காலத்தில் தேவடியாள் எனக் கொச்சைப்படுத்தப்பட்டு) வாழ்ந்த பொட்டிட்ட மங்கையர் பற்றியும் அவர்களின் வாழ்க்கை அமைப்புப் பற்றியும் கூறும் வரலாற்றுச் சான்றாதார நூலாக இந்நூல் அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சிவாலயமான ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்கு அடிமை பூண்டவர்களாக அபிஷேகவல்லியாரும், அவர்தம் குடும்பமும் வாழ்ந்தமை பற்றியும் அவர்கள் ஆற்றிய பணிகள் பற்றியும் விளக்கும் வகையில் அக்குலத்தில் உதித்த அஞ்சுகம் என்பவரால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கோவிலில் நிவந்தம் அல்லது கூலி பெற்று ஆடுபவர்களான உருத்திர கணிகையர் என்னும் குலத்தவர் மலரும் இறையடியார்களாக வாழ்ந்தவாறு, மற்றும் சமய இலக்கியச் சான்றுகள் என்பன தூய தமிழில் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.