9151 சிவநெறி அடியார்கள்.

நா.முருகையா. சுன்னாகம்: நா.முருகையா, ஊரெழு கிழக்கு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்டர்ஸ், பலாலி வீதி).

iv, 108 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 17.5×12.5 சமீ.

சைவ சமயத்தில் இறைவனின் அருள்பாலிக்கப்பெற்ற அடியார்களின் கதைகளை இந்நூலாசிரியர் சுவையாக இந்நூலில் வழங்கியுள்ளார். துன்பம் துடைத்து நன்மை அருள்வான் ஈசன், உள்ளத்தில் எழுந்த உன்னத ஆலயம், மானிடக் காதலுக்கு மகேசன் தூது, பகைவனுக்கருளிய பண்பு நெஞ்சம், இல்லை என்ற சொல்லை அறியாத இயற்பகை நாயனார், அருள் உள்ளம் கொண்ட அப்பையர் தீட்சிதர், கந்தன் அருள்பெற்ற கச்சியப்ப சிவாச்சாரியார், மனித முகத்தை மறுத்த முசுகுந்த சக்கரவர்த்தி, பரமன் மடிமீது அமர்ந்த பசுபதி நாயனார், திருவருள் பெற்ற குருஞான சம்பந்தர், சீடனை குருவாய் ஏற்ற செம்மல், ஆசாரமா இன்பமா, அன்னை மீனாட்சி அருள்பெற்ற நீலகண்ட தீட்சிதர், ஆடற் பெருமானின் கால் நோகுமே என்று வருந்திய இராஜசேகர பாண்டியன், இளைக்காத கொடையுள்ளம் கொண்ட இளையான்குடிமாறன், ராஜபொக்கிஷம், சாட்சிக்கு வந்த சர்வேஸ்வரன், தாயுமான ஈசனுக்குத் தாயானவள், கந்தன் அருள்பெற்ற கட்டபொம்மன், திரௌபதி ஏன் சிரித்தாள் ஆகிய 20 தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 225342).

ஏனைய பதிவுகள்

13000+ Jogos De Casino Dado

Content Posso De Alguma Aparência Retirar As Fichas E Ganhei Concepção Apostar Slots Apontar Seu Website? Melhores Sites Com Aparelhamento Infantilidade Bingo Online Grátis A