ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (மூலம்), ஆறுமுகம் கந்தையா (பதிப்பாசிரியர்). கொழும்பு 11: அஷ்டலகஷ்மி வெளியீடு, அஷ்டலகஷ்மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: கௌரி அச்சகம்).
158 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 22×14 சமீ.
கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ சமய தத்துவங்களை எளியமுறையில் பரப்புவதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் சைவ-வினாவிடை அந்நாளில் வெற்றிகண்டிருந்தது. இன்றளவில் சைவசமயம் கற்போருக்கான விருப்பு நூலாக இது இருந்து வருகின்றது. முதலிரு புத்தகங்களை உள்ளடக்கிய இப்பதிப்பு, தோத்திரத் திரட்டுடன் வெளிவந்துள்ளது. இந்நூலின் முதலாம் பிரிவு, கடவுளியல், புண்ணிய பாவவியல், விபூதியியல், திருமூல மந்திரவியல், நித்திய கருமவியல், சிவாலய தரிசனவியல், தமிழ் வேதவியல், தோத்திரத்திரட்டு ஆகிய ஏழு பாடங்களை உள்ளடக்குகின்றது. இரண்டாவது பிரிவு, பதியியல், பசுவியல், பாசவியல், வேதாகமவியல், சைவபேதவியல், விபூதியியல், உருத்திராட்சவியல், பஞ்சாட்சரவியல், சிவலிங்கவியல், நித்திய கருமவியல், சிவாலய கைங்கரியவியல், சிவாலய தரிசனவியல், குருசங்கம சேவையியல், மகேசுர பூசையியல், விரதவியல், அன்பியல் ஆகிய 16 பாடங்களையும், தோத்திரத்திரட்டு, திருநீற்றுப்பதிகம், கோளறு பதிகம், திருவெம்பாவை, பெரியபுராணச் செய்யுள் ஆகிய தோத்திரத் திரட்டையும் உள்ளடக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 122901)