9191 கதிர்காமம் கந்தன் கோவில்: அன்றும் இன்றும்.

செ.சுந்தரலிங்கம். கீரிமலை: செ.சுந்தரலிங்கம்,  மகாலிங்க வாசா, 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).

(6), 46 பக்கம், தகடு, விலை: ரூபா 97.50, அளவு: 21.5×14 சமீ.

ஏழுமலைவாழ் கந்தன், கந்தபுராணத்தில் கதிர்காமம், கதிர்காமமும் கீரிமலையும், தெய்வயானை-முருகன்-வள்ளி, புத்தரின் கதிர்காம விஜயம், அநுராதபுரம் போதிமர நாட்டுவிழாவும் கதிர்காமப் பிராமண விருந்தினரும், கந்த-முருக வழிபாடு, கதிர்காம யாத்திரைக்கு ஆங்கில அரசு விதித்த தடையை நீக்குதல், கதிர்காமத்தைப் பௌத்த சிங்களமயமாக்கும் முயற்சிகள், நூற்றாண்டுகாலமாக, கதிர்காமக் கந்தனாலய நிபந்தங்கள், முடிவுரை ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்-மேற்கோள்கள் என்ற பிரிவில், வீரவாகு தேவரும் குமரிக் கண்டமும், கடல்கோளும் குமரிக்கண்டப் பகுதிகள் மறைவும், பேரழிவுகளும் மக்கள் துயரங்களும், கதிர்காமக் கோவில் ஆதிக் கட்டடம், கதிர்காமக் கோயில் வழிபாடு, கதிர்காமத்தில் துட்டகைமுனுவின் விரதம், கடவுள் நம்பிக்கையும் அற்புதங்களும், அரசாங்க நில அளவையும் குடியிருப்பாளர் விவரமும், பாரெங்கும் பரவிய கந்த வழிபாடு, ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் கதிர்காமக் கந்தன் கோவில் வழக்குகள், முடிவுரை ஆகிய 11 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்