9207 சிவயோக சுவாமிகள் நற்சிந்தனையிற் பாடியருளிய முருகன் திருப்பாடற்றிரட்டு.

சிவயோக சுவாமிகள். யாழ்ப்பாணம்: சிவதொண்டன் நிலையம், 1வது பதிப்பு, ஜனவரி 1989. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432, காங்கேசன்துறை வீதி).

34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

மாவிட்டபுரத்தில் வைகாசி 1872இல் பிறந்தவர் சிவயோக சுவாமிகள். பள்ளிப்படிப்பை முடித்து கிளிநொச்சி நீர்ப்பாசன அலுவலகத்தில் களஞ்சியப் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். நல்லூர் கோவிலில் செல்லப்பா சுவாமிகளின் தரிசனம்பெற்றபின்னர் முழுமையான ஆன்மீகவாதியாகியவர்.  அவர் தன் வாழ்நாளில் அவ்வப்போது பாடல்களாகவும், உபதேசங்களாகவும் கவிதைகளாகவும் உரைகளாகவும் பக்தர்களுக்கு அருளியவை பின்னாளில் நற்சிந்தனைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. நற்சிந்தனை நூலிலுள்ள முருகப்பெருமானைப் பற்றிய திருப்பாடல்களை மாத்திரம் திரட்டித் தொகுத்து தனிநூலாக்கியுள்ளனர் சிவதொண்டன் சபையினர்.

ஏனைய பதிவுகள்

17163 பெரிய புராணம் வசனம்.

ஆறுமுக நாவலர். சென்னை 600 017: முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராய நகர், 2வது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, ஜுலை 1997. (சென்னை 600 013: பாரி

12399 சிந்தனை: தொகுதி II (புதிய தொடர்) இதழ் 1 (மார்ச் 1984).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1984. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). (4), 141 பக்கம், விலை: ஆண்டுசந்தா ரூபா 75., அளவு: