9380 தமிழ் அமுதம்: மூன்றாம் புத்தகம்.

அ.சே.சுந்தரராஜன். சுன்னாகம்: அ.சே.சுந்தரராஜன், ஆசிரியர், இராமநாதன் கல்லூரி, மருதனார்மடம், 1வது பதிப்பு, 1956. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 106 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 21.5×14 சமீ. பாடசாலை மாணவர்களுக்கு தமிழ்ச் சுவையை உண்டாக்கத்தக்க செய்யுட் பகுதிகளைத் தேர்ந்து அவரவர் தரத்துக்கேற்ப வரிசைப்படுத்தித் தெளிவான உரையுடன் தமிழ் அமுதம் தொடரில் ஐந்து புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆறாம் வகுப்புத் தொடங்கி படிப்படியாக  மேல்வகுப்புகளில் உபயோகப் படுத்தக்கூடிய வகையில் இச்செய்யுள்களும் அவற்றுக்கான பொழிப்புரைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் இது மூன்றாவது புத்தகமாகும்.  நூலாசிரியர் அ.சே.சுந்தரராஜ ஐயங்கார் அவர்கள் சுன்னாகம் இராமநாதன் கல்லூரி ஆசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104673).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்