9709 மௌனங்கள் கலையும்போது.

வின்சென்ட் பற்றிக்ஸ் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, அமலமரி தியாகிகள் சபை, 1வது பதிப்பு, நவம்பர் 1985. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 310, மணிக்கூட்டு வீதி).

50 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5.00, அளவு: 21×14 சமீ.

நான் உளவியல் சஞ்சிகை வெளியீட்டாளர்களின் முயற்சியில் உருவான சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். மாறியது நெஞ்சம் (கமலா இளங்கோவன்), மௌனங்கள் கலையும்போது -1 ( யாழ் பாலன்), மௌனங்கள் கலையும்போது -2 (ஆனந்தி செந்தில், ஏழாலை), மௌனங்கள் கலையும்போது -3 (வளவை வளவன்), உன்னை பிரிகின்றேன் (இ.ஸ்ரலின், உரும்பிராய்), மௌனங்கள் கலையும்போது -4 (றிமா), மௌனங்கள் கலையும்போது-5 (ஜெனகமகள் சிவஞானம்), மௌனங்கள் கலையும்போது-6 (சௌந்தரன்), ஒரு மேதையும் ஒரு பேதையும் (ஆனந்தி செந்தில்), சுருதி மாற்றம் (ஜெனகமகள் சிவஞானம்) ஆகிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  83503). 

ஏனைய பதிவுகள்