வை.முத்துக்குமாரசுவாமி. கொழும்பு: வை.முத்துக்குமாரசுவாமி, ஆசிரியர், சென்ற் ஜோசப் கல்லூரி, 3வது திருத்திய பதிப்பு, 1955, 1வது பதிப்பு, 1950. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).
(7), 98 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×14 சமீ.
நான்காம் வகுப்பின் மூன்று தவணைகளுக்கும் ஏற்றவாறு பிரிக்கப்பட்டு 17 பாடங்களாக வரலாற்றுத் தகவல்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. 1ம் தவணையில் நம் நாட்டின் பழைமை, ஸ்ரீபாதம் -நம் தேசிய மலை, நம் நாட்டுப் பழைய ஊர்கள்- கதிர்காமம், திருக்கோணமலை, மாதோட்டம், வட இலங்கைத் தலைநகரங்கள் என்பன தரப்பட்டுள்ளன. வன்னி, மட்டக்களப்பு, அநுரதபுரம், பொலநறுவை, கண்டி எனப்படும் மகாநுவரை, கொழும்பு என்பன 2வது தவணைப் பாடங்களாகத் தரப்பட்டுள்ளன. பண்டைத் தலைநகர அரண்கள், சரித்திர சம்பந்தமான இடங்கள் சில, போக்குவரவுச் சாதனங்கள், போர்முறைகள், மக்கள் வாழ்க்கை முறைகள் என்பன 3வது தவணைப் பாடங்களாகத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 98796).