றமீஸ் அப்துல்லாஹ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 260 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-333-4.
இந்நூல் இதழியல் பற்றியும் அச்சு ஊடகத்தின் தோற்றம், கோட்பாடு, அதனால் ஈழத்தில் உருவான பத்திரிகைகளின் பின்னணி ஆகியவற்றையும், அதன் சமூக அரசியல் இலக்கிய முக்கியத்துவம் என்பனவற்றினையும் விரிவாக ஆராய்கின்றது. அறிமுகம், இதழியல் கொள்கைகளும் இதழியல் வளர்ச்சியும், 19ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப் பத்திரிகைகள், 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப் பத்திரிகைகள், பத்திரிகை அமைப்பும் விடயங்களும், பத்திரிகையும் தமிழ் மொழி வளர்ச்சியும் ஆகிய ஆறு இயல்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னிணைப்பகளாக இலங்கை சுவடிக்கூடத்தில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளின் விபரம், ஆய்வுக்காக சுவடிக்கூடத்திலும் தனியார் நூலகங்களிலும் பார்க்கக் கிடைத்த இதழ்கள், தமிழ்ஆங்கில அச்சுப்பெட்டியின் மாதிரித் தோற்றம், சில பத்திரிகைகளும் செய்திகள் விளம்பரங்களும், கிடைக்கப்பெற்ற சில பத்திரிகைகளது முன்பக்கத் தோற்றம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. றமீஸ் அப்துல்லாஹ் (1969) சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு கலைமாணிப்பட்டத்தையும், முதுகலைமாணிப்பட்டத்தையும் பெற்றவர். தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறைத் தலைவராகவும், முதுநிலை விரிவுரையாளராகவும்; கடமையாற்றுகின்றார் .