சின்னத்துரை சோதிலிங்கம். இணுவில்: தேன்மொழி சோதிலிங்கம், செல்வகம், இணுவில் கிழக்கு, காரைக்கால் வீதி, 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி கணனி அச்சகம், 1227 கே.கே.எஸ்.வீதி, பூநாறி மரத்தடி).
(2), 158 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 20×15 சமீ.
பல்லவர் கால சமய வரலாற்றின் சிறப்பு, இந்து சமய வளர்ச்சி, சைவ சமயப் பிரிவுகளுள்ளே காஷ்மீர சைவம் பெறும் இடம், தோத்திரமும் சாஸ்திரமும் சமயவாழ்வினை வளம்படுத்தும் பாங்கு ஆகிய நான்கு கேள்விகளுக்கு விரிவான விடை முதல் 52 பக்கங்களிலும், சித்தாந்த சாஸ்திர நூல்களிலே திருவருட்பயன், இந்துக்களின் ஒழுக்கவியல் பண்புகள், காரைக்கால் அம்மையார், மனுதர்ம சாஸ்திரம், தஞ்சைப் பெருங்கோயில், ஸ்ரீதட்ஷண கைலாச புராணம், வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயம், வானவன் மாதேவி ஈஸ்வரம், இலிங்கோற்பவ மூர்த்தமும் வழிபாடும், தட்சிணாமூர்த்தமும் அதன் வழிபாடும், திருமந்திரமும் அது காட்டும் வாழ்வு முறையும், நாயக்கர் கால கோபுரங்கள், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், நம்மாழ்வார், ஆகிய பதினைந்து கட்டுரைகள் 53-157ம் பக்கங்களில் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 191010).