பொன். கந்தசாமி. யாழ்ப்பாணம்: மாதகல் இந்துசமய அபிவிருத்திச் சங்கம், மாதகல், 1வது பதிப்பு, வைகாசி 1990. (யாழ்ப்பாணம்: சுவர்ணா அச்சகம்).
(6), 25 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
மாதகல்பதி நுணசை முருகமூர்த்தியின்பால் மெய்யன்பு பூண்டவர் வித்துவான் பொன் கந்தசாமி அவர்கள். அம்முருகன் ஆலயத்தில் நீண்டகாலமாக ஆண்டுதோறும் கந்தபுராண படனம் செய்துவந்தவர். சைவசித்தாந்தக் கருவூலமாக அமைந்த கந்தபுராண வள்ளியம்மை திருமணப் படலத்துள் பொதிந்து கிடக்கும் மெய்ஞ்ஞானக் கருவூலமாகிய மூலபண்டாரத்தை தன் ஆய்வாகக் கொண்டு இந்நூலில் விளக்கியுள்ளார். இந்நூல் மாதகல் இந்துசமய அபிவிருத்திச் சங்கத்தின் இருபதாவது பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87159).