ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 2வது பதிப்பு, ஜுலை 2007, 1வது பதிப்பு, ஜனவரி 2001. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
ஆஞ்சனேயர் மகிமையும், வழிபாட்டு முறைகளும், பிரார்த்தனைப் பாடல்களும், புராண இதிகாசக் கருத்துக்களுடன் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஆஞ்சனேயர் அவதாரம், பாலஹனுமான், அறிவும் ஆற்றலும், சீதையின் புகழ்மொழி, பெரியாழ்வார் புகழ்மொழி, இராவணன் புகழ்மொழி, அருணாசலக் கவி புகழ்கிறார், பஞ்சபூத நாயகன், சரணாகதி தத்துவம், இராமனில் உயர்ந்தவன், அனுமனின் பெரும் சிறப்புகள், சப்த சிரஞ்சீவிகள், விஸ்வரூபம், மகாபாரதத்தில் ஆஞ்சனேயர், அர்ச்சுனனும் ஆஞ்சனேயரும், பீமனும் ஆஞ்சனேயரும், கிருஷ்ணனின் திருவிளையாடல், ஆஞ்சனேயரின் சிறப்புகள், ஆஞ்சனேயர் வழிபாட்டின் பயன்கள், வழிபாட்டுக்குரிய சிறப்பான நாட்கள், ஆஞ்சனேய வழிபாட்டு முறைகள், ஈழத்திலுள்ள ஆஞ்சனேயர் கோவில்கள் ஆகிய சிறு தலைப்புகளில் இக்கட்டுரை விரிகின்றது.