அருட்பணி அ.ஸ்ரீபன் (மூல ஆசிரியர்), வி.பி.தனேந்திரா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: முரண்பாட்டுக் கற்கைநெறி மன்றம், இலங்கைத் திருச்சபை, 1வது பதிப்பு, வைகாசி 2010. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம், நாவலர் வீதி).
xiv, 124 பக்கம், தகடு, விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
இயேசுவின் பிறப்பில் புலப்படும் இறை உண்மை என்ற பிரிவின்கீழ் 6 கட்டுரைகளும், இயேசுவின் போதனையில் புலப்படும் இறை உண்மை என்ற பிரிவின்கீழ் 18 கட்டுரைகளும், இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்த்தெழுதலில் புலப்படும் இறை உண்மை என்ற பிரிவின்கீழ் 7 கட்டுரைகளுமாக மூன்று பெரும்பிரிவுகளின்கீழ் ஆசிரியரின் 31 இறையியல் கட்டுரைகள் இந்நூலில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இலங்கைத் திருச்சபையின் இளம் திருப்பணியாளர் அ.ஸ்ரிபன், 2010 தை முதல் இலங்கை இறையியல் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். இவர் நல்லூர் புனித யாக்கோபு ஆலயத்தின் பங்குத் தந்தையாக பணியாற்றிய 2004-2009 காலப்பகுதியில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றியவர். இவரது முதலாவது நூல் இறை விழுமியம் 2009இல் இலங்கை இலக்கியப் பேரவையின் விருதினைப் பெற்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 223981).