க.வேந்தனார், நா.கணபதிப்பிள்ளை (இணையாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 10வது பதிப்பு, 1971, 1வது பதிப்பு, 1959. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).
(6), iv, 394 பக்கம், விலை: ரூபா 4.25, அளவு: 21×14 சமீ.
இலங்கை வித்தியாபகுதியாரின் ஜீ.சீ.ஈ.சாதாரண தரத்தின் 1969-1971 ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்திற்குரிய புதிய பகுதிகள் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், திருப்புகழ் ஆகிய புதிய பகுதிகள் 1969-1971 ஆம் ஆண்டுப்பாடத்திட்ட ஒழுங்கின்படி சேர்க்கப்பட்டுள்ளன. புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு வித்துவான் சைவப்புலவர் நா.கணபதிப்பிள்ளை அவர்கள் விரிவுரை எழுதி வழங்கியுள்ளார். திருவருட்பயன் முதல் ஐந்து அதிகாரங்களுக்கும் சிறப்பான விளக்கவுரை தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 82261).